full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

எல்லாம் சுத்தப் பொய்.. அமலா பால் விளக்கம்!!

பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு எந்த தமிழ் நடிகையும் நடிக்க வருவதில்லை. அப்படியே நடிக்க வந்தாலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். விவாகரத்து ஆன நடிகைகளை தமிழ் சினிமா கண்டுகொள்வதே இல்லை. இப்படி பல முரணான சூழல்களை உடைத்தெறிந்து விட்டு வெற்றிகரமான கதாநாயகியாக திகழ்கிறார் நடிகை அமலா பால்.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் அமலாபால். “அதோ அந்த பறவை போல”, “ஆடை”, “ராட்சசன்” போன்ற படங்களில் நடித்து வரும் அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

“ இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய். நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக இருந்தால் போதும். எல்லா துறைகளிலும் நீடித்து இருந்து சாதனை செய்தவர்களை பார்த்தால் இது புரியும்.

அதற்காக வருத்தமே படாமல் வாழ முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் 2 நாள் துக்கம் அனுபவிச்சுட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். நான் இப்போது முழுக்க சைவத்துக்கு மாறி இருக்கிறேன். இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நமக்கான சரியான பாடத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்து உள்ளார்.