full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

ராஜமௌலி புதிய பயணம்

ராஜமௌலி படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவரின் பாகுபலியை தொடர்ந்து அடுத்து என்ன கதையை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு பாக்ஸிங் கதைக்களத்தை ராஜமௌலி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜமௌலியின் பாகுபலி படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக அவரை அங்கு அழைத்துள்ளார்கள், இதனால், ராஜமௌலி மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும், அங்கு செல்ல ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைப்பு வந்த முதல் பிரபலம் ராஜமௌலி தான்.