full screen background image
Search
Tuesday 7 May 2024
  • :
  • :
Latest Update

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பே நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே. என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதையடுத்து, இயக்குனர்கள் கேவி ஆனந்த், சுதா கொங்காரா, ஹரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

தற்போது என்.ஜி.கே. மற்றும் கேவி ஆனந்தின் புதிய படங்கள் என்று அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குனர் கேவி ஆனந்த் தனது படத்தின் டைட்டிலை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று 3 தலைப்பை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மீட்பான், காப்பான், உயிர்கா என்ற 3 தலைப்பை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த தலைப்பை வைத்து பார்க்கும் போது சூர்யாவின் 37ஆவது படத்தில், அவர், பாதுகாப்பு அதிகாரி அல்லது புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். மேலும், மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.