full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய தனுஷ்

சமீபத்தில் பத்திரிக்கையாளர் ராஜீவ் காந்தி இயக்கிய ‘கொலை விளையும் நிலம்’ படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் சுப்பிரமணிய சிவா வந்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றி தனுஷிடமும் விவரித்திருக்கிறார்.

தமிழகத்தில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளை கேள்விப்பட்ட தனுஷ், நாமும் ஏதாவது செய்யலாம் என்று உறுதியளித்திருக்கிறார். அதன்படி தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு 50 ஆயிரம் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

தனுஷின் முடிவை அறிந்த சுப்பிரமணிய சிவா, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினரின் தகவல்களை திரட்டி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 50 ஆயிரமாக வழங்கி, அவர்கள் அனைவரது போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்நிகழ்ச்சியில் தனுஷின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.