பக்கா ப்ளானுடன் களமிறங்கும் முருகதாஸ்

மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்து இந்திப் படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் பேசிய போது, “பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. விஜய், சூர்யா, மகேஷ்பாபு, அமீர்கான் படங்களை இயக்கினால் அவர்களுடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். எனது முத்திரையும் படத்தில் இருக்க வேண்டும். நானும், அமீர்கானும் ஒரே ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தோம். அப்போது நான் அவரை […]

Continue Reading

உங்களுக்கு புரியாததைத் தவறென்பது நியாயமில்லை : ரசிகர்களை விளாசிய துல்கர்

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியது. மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம் வெளியாகிய பிறகு மாற்றப்பட்டது. இந்நிலையில், ‘சோலோ’வை கொன்றுவிடாதீர்கள். கெஞ்சிக் கேட்கிறேன் என்று துல்கர் சல்மான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “வேலை காரணமாக இன்றே படம் பார்த்தேன். நான் நினைத்துப் பார்த்ததைவிட படம் […]

Continue Reading

நடிகைக்காக அடி வாங்கிய ரசிகர்கள்!

நடிகைகளைப் பார்க்கக் கூட்டமாய்க் கூடுவதும், போலீசிடம் அடி வாங்குவதும் நம்மாட்களுக்கு புதிதொன்றும் இல்லை. இந்த முறை வாங்கியிருப்பது ஆந்திர ரசிகர்கள்! திருப்பதியில் புதிதாக ஒரு ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. அதில் ஆந்திர மாநில மந்திரி அமர்நாத்ரெட்டி, திருப்பதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ரகுல்பிரித்சிங் பங்கேற்றார். அப்போது அவரை பார்ப்பதற்காகவும், செல்போனில் படம் எடுப்பதற்காகவும் புதிய ஜவுளிக்கடையின் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து […]

Continue Reading

அதர்வாவின் அடுத்த பட வெளியீடு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா தற்போது, `செம போத ஆகாதே’, `ருக்குமணி வண்டி வருது’, `இமைக்கா நொடிகள்’, `ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. `செம போத ஆகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், […]

Continue Reading

கமல் உணர்ந்த பெரியாரின் கனவு

முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் பெரியாரின் கனவை உணர முடிகிறது என்றும் […]

Continue Reading

குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற நடிகர் ஜெய்

கடந்த 21ம் தேதி அடையாறு அருகில் வாகன சோதனையின் போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக நடிகர் ஜெய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரனை கடந்த 5ம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் ஜெய் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை நேரில் ஆஜரான ஜெய், தான் வாகனம் ஓட்டி வந்த போது மது அருந்தி இருந்ததாக குற்றத்தை […]

Continue Reading

கமலை வரவேற்கும் கெளதமி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது. இந்த முகாமை நடிகை கெளதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய நடிகை கெளதமி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் […]

Continue Reading

நிறம் மாறாத பூக்களைத் தயாரிக்கும் நீலிமா

தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. வாணி ராணி, தாமரை, தலையணைப் பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும், தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி […]

Continue Reading

ஹர ஹர மகாதேவகியின் இரண்டாவது பாகமா இருட்டு அறையில் முரட்டு குத்து?

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே இ ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் […]

Continue Reading

புதிய படத்தில் ஸ்ருதி ஹரிஹரனின் 7 ஸ்வரங்கள்

‘லூசியா’ படத்தின் மூலம் பிரபலம் ஆன கன்னட நடிகை சுருதி ஹரிஹரன். தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘நிபுணன்’ ‘சோலோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘ரா ரா ராஜசேகர்’ படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கலாத்மிகா என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் ‘ஸ்டெல்லா’ என்ற படத்தை தயாரிக்கிறார். வினோத்ராஜ் இயக்கும் இந்த படம் சைன்டிபிக் திரில்லர் கதையாக உருவாகிறது. இதில் சுருதி ஹரிஹரன் 7 வேடங்களில் நடிக்கிறார். இது […]

Continue Reading