full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

நடிகைக்காக அடி வாங்கிய ரசிகர்கள்!

நடிகைகளைப் பார்க்கக் கூட்டமாய்க் கூடுவதும், போலீசிடம் அடி வாங்குவதும் நம்மாட்களுக்கு புதிதொன்றும் இல்லை. இந்த முறை வாங்கியிருப்பது ஆந்திர ரசிகர்கள்!

திருப்பதியில் புதிதாக ஒரு ஜவுளிக்கடை திறக்கப்பட்டது. அதில் ஆந்திர மாநில மந்திரி அமர்நாத்ரெட்டி, திருப்பதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ரகுல்பிரித்சிங் பங்கேற்றார். அப்போது அவரை பார்ப்பதற்காகவும், செல்போனில் படம் எடுப்பதற்காகவும் புதிய ஜவுளிக்கடையின் வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்து ஜவுளிக்கடையின் எதிரே வாசலில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்லாமல் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர். ஆத்திரம் அடைந்த போலீசார் அவர்கள் மீது திடீரெனத் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.