full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

நான் இந்த நிலைக்கு வரக் காரணம் இவர் தான் : ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்… ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் ஏற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கு நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாரும் சொன்னார்கள்.

என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேரும் நான்தான் பேச வேண்டும் என்றார்கள். அது எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது என் கடமை.

இதுபோல் ‘பாகுபலி’ சிவகாமி கதாபாத்திரத்துக்கு என் குரல் தான் பொருத்தமானது. எனவே, நான் சொந்தக்குரலில் தான் பேச வேண்டும் என்று ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சார் கூறினார்.

என் குரல் தான் சிறப்பாக இருக்கும் என்று நம்பினார். அதுபோல் அமைந்தது. ‘பாகுபலி’ போன்ற பிரமாண்டமான படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அது நடந்து இருக்கிறது என்றார்.