மெர்சல் பிரச்சனையில் மௌனம் கலைத்த விஷால்…

மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷால் தனது ஆதரவை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். விஷால் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது, ”மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் காக்கும் விஷால்.. காரணம் என்ன?

  மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை  நீக்க வேண்டிய அவசியமில்லை […]

Continue Reading

ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறார்கள் தியேட்டர்க்காரர்கள்?

எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த திரையரங்கம் இருந்தது. தும்பை நிறத்தில் அகலமாய் விரிந்திருந்தத் திரைக்கு அருகில் குளிர்ந்த மணலோடும், கொஞ்சம் பின்னால் மரத்தாலான நீண்ட பெஞ்சுகளோடும், அதற்கும் பின்னால் சிவப்பு வண்ணம் பூசிய நாற்காலிகளோடும், தகரத் தட்டுகளால் ஆன கூரையோடும் ஆன அதன் அமைப்பு இப்போது நினைக்கையிலும் நெஞ்சினில் ஈரத்தோடு அப்படியே தான் இருக்கிறது. அங்கே தான் சினிமா அறிமுகமானது. அங்கேதான் ஆதர்ஷ நாயகர்கள் அறிமுகமானார்கள். மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ என்று அளவாகவே […]

Continue Reading

பரபரப்பை ஏற்படுத்திய விஷாலின் அதிரடி அறிவிப்பு

கடந்த ஒரு வாரமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரையரங்க கட்டண உயர்வு பிரச்சனையில் முக்கியமான முடிவுகளை தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இந்த முடிவுகளைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது அறிக்கையில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், * நாளை முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும். * கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும். * அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும். * தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும். […]

Continue Reading

திரைப்படம் தயாரிக்கிறார் வைகோ

வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், “வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தைப் பார்க்க […]

Continue Reading

திருமணம் குறித்து நடிகர் விஷால் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தமிழ் சினிமா குறித்தும், தனது திருமணம் குறித்தும் பேசினார். நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது… ”நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பிறகு தான்  திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளேன். அதனை நினைவூட்டுவதற்காகவே  கார்த்தியின் முன்பு அடிக்கடி வேஷ்டி சட்டை அணிந்து  நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும் […]

Continue Reading

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள், மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் என பலரும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் […]

Continue Reading

வித்தியாசமான படைப்புகளில் விஷால் !

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் தயாரித்து, நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று தமிழகம், கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு டப்பிங் “டிடெக்டிவ்” வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. மேலும் விஷால், மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “வில்லன்” திரைப்படமும் தீபாவளியன்றே வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து விஷால் நடிப்பில், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான […]

Continue Reading

‘மாணிக்’கை அறிமுகப்படுத்திய துப்பறிவாளன்

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைட்டிலையும் வென்றுள்ளது. மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் […]

Continue Reading