எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த விஜயகாந்த்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் […]

Continue Reading

தினகரனுடன் இணைந்து பணியாற்றத் தயார் – விஷால்!

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், பிரம்மாண்டமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த வெற்றிக்குப் பிறகு பலரும் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், […]

Continue Reading

இவர்களையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய அவமானமாக உள்ளது : டி ராஜேந்தர்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 36 பேர் நிற்கின்றனர். இந்த அணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு, டி சிவா, டி ராஜேந்தர், மதுரை அன்புசெழியன் […]

Continue Reading

விஷாலுக்கு ஹைகோர்ட் சம்மன்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ராதாரவி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் ஐகோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை ராதாரவி மீது நடவடிக்கை […]

Continue Reading

டைம் பாஸூக்காக அரசியலுக்கு வரக்கூடாது : ரோஜா

திருப்பதியில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் பேசினார். அப்போது, “எம்ஜிஆர்., ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும். விஷால் அரசியலுக்கு வரலாம். ஆனால் டைம் பாஸ் செய்வதற்காக விஷால் அரசியலுக்கு வரக்கூடாது. திருப்பதி கோவிலில் விஐபி தரிசனத்தில் முறைகேடுகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. முறைகேடுகளை தடுக்க வேண்டிய விஜிலன்ஸ் அதிகாரிகள் என்னை […]

Continue Reading

விஷாலுக்கு சவால் விட்ட சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விசயங்கள் தொடர்பாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7 கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. […]

Continue Reading

புரட்சித் தளபதிக்கு சோதனை மேல் சோதனை!

சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். வருமான வரித்துறை ரெய்டு, ஆர்.கே.நகர் வேட்புமனு நிரகரிப்பு என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வரும் விஷாலுக்கு, அவர் பொறுப்பு வகிக்கிற நடிகர் சங்கம் மற்றும் தய்யரிப்பாளர் சங்கத்திலிருந்தே இப்போது ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, விஷாலுக்கு எதிராக சேரன் களமிறங்கினார். சில தயாரிப்பாளர்களோடு இணைந்து சங்க கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு டி.ராஜேந்தர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் […]

Continue Reading