எனக்கு இதுவரை ஆதரவு அளித்த நிர்வாகிகள் – தொண்டர்களுக்கு நன்றி: டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என்பதால், கட்சியின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்திருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அதேசமயம், தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் இந்த முடிவினை கண்டித்தனர். அதன்பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தன்னை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக எடுத்த முடிவிற்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், நான் ஒதுங்கி இருப்பதால் நன்மை நடப்பதாக இருந்தால் […]

Continue Reading

அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு அட்வைஸ்

ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிடவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

Continue Reading