full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு அட்வைஸ்

ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிடவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.