full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

கோவில் திறப்பு விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக ரஜினி?

நடிகர் லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்கு கோயில் கட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கோயில் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம். இதையடுத்து கோவிலைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

அதன்படி, வருகிற மே 14-ந் தேதி அன்னையர் தினத்தன்று அந்த கோவிலை திறப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்பிக்க உள்ளார்.

இந்த கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினியை சிறப்பு அழைப்பாளராக ராகவா லாரன்ஸ் அழைத்திருக்கிறாராம். அவரும் இந்த விழாவுக்கு வருவதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் தாயாரின் உருவச்சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.