3 பேருக்கு ஸ்கெட்ச் போடும் நயன்தாரா

News

பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். இதனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி தெலுங்கு, மலையாள மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு பணம் பார்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மம்முட்டியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்து கேரளாவில் வசூல் குவித்த ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தை தமிழில் வாசுகி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வருகின்றனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி கொலை செய்கிறார் என்பது இந்த படத்தின் கதை. சாஜன் டைரக்டு செய்திருந்தார்.