full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

விஜய் என் கதையை திருடிவிட்டார் – துணை இயக்குனர்

தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளிவந்துள்ள ‘தியா’ படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஒன்று என துணை இயக்குனர் சந்திரகுமார் குற்றமச்சாட்டியுள்ளார்.

விஜய்

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது..

“கருவிலேயே அழிந்த பிறக்காத ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தன்னை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறது என்று படம் நகரும் விதத்தில் 2015-ம் ஆண்டில் கதை எழுதினேன். இயக்குநர் ராஜகுமாரன் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தியா பட விமர்சனம் படித்து அதிச்சியானேன். தியேட்டர் சென்று படத்தை பார்த்தபோது அது அப்படியே என் கதை என தெரியவந்தது.

இயக்குநர் விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர் எடுத்த படத்தின் கதை என்னுடையது. நான் பல வருடங்களாக பலரிடம் கூறிய கதை விஜய்க்கு கிடைத்திருக்கலாம். இது என்னுடைய கதை என நிரூபிக்க என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன.”

“எனக்கு ஒன்றும் வேண்டாம் ‘தியா ‘ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும்” என அவர் கூறியுள்ளார்.