full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

நல்லுறவு தேவை என்பதாலேயே, நெருக்கம் காட்டுகிறோம் : வெங்கய்யா நாயுடு

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த பின் நிருபர்களுக்கு வெங்கய்யா நாயுடு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால் தான், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்போம்.” என்று கூறினார்.