full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

விருச்சககாந்துக்கு உதவிய அபி சரவணன்

கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம் அவரைக் கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது.

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை’ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்குத் தேவையான சில உதவிகளை செய்தார். நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பியவரிடம், சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் உங்களை பார்க்க முடிந்தது. இன்னைக்கு ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இவரை எப்படித் தொடர்பு கொண்டீர்கள் என்று கேட்டோம்.

அதற்கு அவர், “முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி! மனதை ஒருவாரமாக உறுத்திகொண்டிருந்த ஒரு செய்தி, பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்”.

அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் அண்ணன் சாய்தீனா அவர்களுடன் வீடியோவாக கண்டேன். உடனடியாக சாய்தீனா அண்ணனை தொடர்பு கொண்டேன். மோகன் அவர்கள் உதவியுடன் அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் தேவை என கேட்டறிந்தேன். மன இறுக்கம் காரணமாக மட்டுமே அவர் இப்படி ஆனதாகவும், அவருக்கு தேவை சினிமாவில் நல்ல வாய்ப்பும், தங்க இடமும், தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும், நல்ல உடையும் போதும் என்றார்.

சரியாக மாலை நான்கு மணிக்குத் தான் தகவல் கிடைத்தது. இன்று மாலை ஆர்.கே.வி யில் ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக சிறப்புவிருந்தினராக ஆறு மணிக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே விழா நடைபெறும் இடத்திற்கு விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன். அந்த விழா மேடையில், அவருக்குத் தேவையான ஒரு புதிய சாம்சங் ஆண்ட்ராய்டு மொபைல் போன், ஒரு செட் சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றை நானும், எனது நண்பரும் ‘ஓவியா’ எனும் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரைத் தொடர்பு கொண்டு தகவலைக் கூறியவுடன், நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார். மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின் இயக்குனர் குமார்நந்தாவும் ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார். இன்றும் அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்திக் கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிககாந்த்’ அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக சில மணி நேரத்திற்குள் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள்.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.