full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

பாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்

இந்தி சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

 

 

 

 

 

மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் இந்தி சினிமா பாடலாசிரியர் யோகேஷ் கவுர் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இந்தி சினிமாவில் 1970-களில் பிரபல பாடலாசிரியராக இருந்தார். அவர் ஹிருஷிகேஷ் முகர்ஜி மற்றும் பாசு சட்டர்ஜி ஆகியோரின் படங்களுக்கு தலைசிறந்த பாடல்களை வழங்கினார்.

யோகேஷ் கவுர் உத்தபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர். தனது 16-வது வயதில் உறவினர் ஒருவரின் உதவியால் வேலை தேடி மும்பைக்கு வந்தார். மும்பையில் தான் அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டு பாடலாசிரியர் ஆனார்.

யோகேஷ் கவுர் மரணத்துக்கு பிரபல இந்தி சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.