full screen background image
Search
Wednesday 8 May 2024
  • :
  • :
Latest Update

தூத்துக்குடி மக்கள் என்னைப் பார்த்தால் மகிழ்வார்கள் – ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தான் தூத்துக்குடிக்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி விமானம் நிலையம் சென்ற அவர், அங்கிருந்து நேராக துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.

முன்னதாக இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,

“தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்கச் செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.