full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை : `மாநகரம்’ சதீஷ்

நடிகர் சதீஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் ‘மாநகரம்’ படம் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு இவருக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

இது பற்றி சதீஷிடம் கேட்ட போது… “எனக்கு சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான். பி.பி.ஏ முடித்தேன். எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’. அதில் விஷ்ணுவர்தன் சார் தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு. தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். பிறகு இடைவெளி விழுந்தது. மனம் சோர்வு அடையும் நிலை. எனவே மஸ்கட்டில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஆனாலும் சினிமா ஆர்வம் விடவில்லை. திரும்பி வந்து விட்டேன்.

இப்போது ‘மாநகரம்‘ எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. இடையில் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. என் தம்பிதான் குடும்ப பொறுப்பையும் சுமந்து வருகிறான். அந்தக் குணமே எனக்குள் ஜெயிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தைக் கொடுத்து இருக்கிறது.

சினிமாவில் வில்லனாக ஒரு ரவுண்ட் வரவேண்டும். இதுவே எனது இப்போதைய இலக்கு” என்றார்.