அரவிந்தஸ்வாமி நடிக்கும் “வணங்காமுடி” படத்தின் இறுதிகட்ட வேலை நடந்து கொண்டிருக்கிறது.விகடன் டெலிவிஸ்டாஸ் சன் தொலைக்காட்சிக்காக தயாரிக்கும் ரன் என்கிற மெகா தொடரை இயக்க போகிறேன்.நான் இயக்குநராக முதலில் அறிமுகமானது சின்னதிரையில் தான்.சித்திரப்பாவை¸நீலாமாலா என்ற 2 சீரியல்களை இயக்கினேன்..அதில் நீலாமலா சீரியல் பெரும் வெற்றி பெற்ற காரணத்தால் திரைப்படங்கள் இயக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 27 படங்கள் இயக்கிய நிலையில் மீண்டும் ஒரு நல்ல தொடரை இயக்க வாய்ப்பு அமைந்துள்ளது.மாறுபட்ட கதைகளம். இதில் தெய்வமகள் சீரியலில் நடித்த கிருஷ்ணாவும்..நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்த சரண்யாவும் நடிக்கிறார்கள்.மேலும் பிரபலமானவர்கள் இந்த சீரியலில் நடிக்கிறார்கள்.
நான் இயக்குநராக முதலில் அறிமுகமானது சின்னதிரையில் தான்
Feb 27, 2019Leo RetchaganNews0Like
Previous Postநயன்தாராவின் வில்லன் நடிகர் ஷான் " இயக்கி " படம் மூலம் இயக்குனரானார்
Next Postமரணத்துடன் போராடிய ரியல் ஹீரோவின் கதை ''கிரிஷ்ணம்"