full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017

• ரஜினி, கமல் ஆகியோர் வெளியிடும் அரசியல் கருத்துக்கள், காவிரி, மீத்தேன் எதிர்ப்பு போன்ற பிரதானப் பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு புகார்
• குடியரசு தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி!
• 3 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் வெற்றி: தோல்வியடைந்தாலும் மதச்சார்பின்மைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மீராகுமார் பேட்டி.
• புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து: தமிழக முதல்வர் பழனிசாமி. மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து.
• ஏழைகள், விவசாயிகளின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் பதவியில் செயலாற்றுவேன்: ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சியான உரை.
• தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான்: உலக நாடுகளில் செயல்படும் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை.
• குற்றவாளி ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி நடப்பது அவமானம்.. சீறிப் பாய்ந்த கமல் அண்ணன் சாருஹாசன் காட்டமான அறிக்கை!
• “நீட்” தேர்வு பிரச்சனையையும் டெங்கு காய்ச்சல் பிரச்சனையையும் தமிழக அரசு சரியாக கவனிக்கவில்லை என நடிகர் கமல் கடும் குற்றச்சாட்டு!
• கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்
• தனியார் நிறுவனங்களுக்கு சுயவிவரங்களை அளிக்கும் போது அரசுக்கு ஏன் அளிக்கக் கூடாது? – உச்ச நீதிமன்றம்
• ரிலையன்ஸ் ஜியோ ஏகபோகத்தை உருவாக்குகிறது: ஏர்டெல்
• காலா படத்தை எதிர்த்து விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும். – ரஜினி சார்பில் மனு தாக்கல்
• அரசின் ஊழல் குறித்து விமர்சிப்பது கமலின் தனிப்பட்ட சுதந்திரம்” -விஷால் பரபரப்பு பேட்டி
• குடியரசுத் தலைவர் தேர்தலில் 77 எம்.பி, எம்.எல்.ஏக்கள் அளித்த வாக்குகள் செல்லாதவை!
• மகளிர் உலகக்கோப்பை தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
• வெளுத்து வாங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. 171 ரன்கள் குவித்து அசத்தல் சாதனை.. மிரண்டு போன ஆஸ்திரேலியா
• சென்னையில் நடந்த சோதனையில் பான்மசாலா, மாவாவை விற்றதாக 421 பேர் கைது

• துருக்கி மற்றும் கிரிஸ் தீவுகளில் நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு
• தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை: அன்புமணி ராமதாஸ்
• ஜெயலலிதா இருந்தபோது கமலின் வாயை கட்டிப்போட்டது யார்?: தமிழிசை கேள்வி
• நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர்கள் மனு
• நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி தமிழகத்தில் 27ம் தேதி மனிதசங்கிலி போராட்டம்
• 2ஜி ஸ்பெக்ட்ரம், வீராணம் ஊழல் பற்றியெல்லாம் வாய் திறக்காத கமல்…திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
• நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 101ஆவது நாளாக போராட்டம்
• சென்னை: கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு
• குடியரசுத் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
• டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை செருப்பால் அடித்து நூதன போராட்டம்
• தஞ்சை: அய்யம்பேட்டை அருகே 40 க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீ விபத்து
• அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு: ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
• சென்னை ஓபன் போட்டி அதிகாரபூர்வமாக ரத்தானது!
• கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி
• பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
• அந்தமான் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது 11 ஊழியர்கள் உயிருடன் மீட்பு

• காவிரி மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 6-வது நாளாக கர்நாடக அரசு வாதம்
• மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாயாவதியின் ராஜினாமா ஏற்கப்பட்டது
• புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
• பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராகுல், சச்சின் வாழ்த்து
• புதுச்சேரி நாளைய (ஜூலை 21)மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு
• வருமான வரித்துறை மீண்டும் சம்மன்.. இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் விஜயபாஸ்கர்!
• ஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை
• நீட் தேர்வு..தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.. பிரணாப்பிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி
• முரசொலி பவள விழாவுக்கு வாங்க… ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு!
• கவர்ச்சி அரசியல்வாதிகளால் ஊழலற்ற நிர்வாகம் தர முடியாது! – ரஜினி, கமல் அரசியல் பற்றி திருமாவளவன்