இந்தி பட உலகில் பல பெண் பித்தர்கள் உள்ளனர் – கங்கனா பாய்ச்சல்

News

இந்தி பட உலகில் மீ டூ புகார் சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சை விவாதமாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் தனக்கு நடிகர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு: பாயல் கோஷ் சொன்ன பாலியல் புகாருக்கு அனுராக் காஷ்யப் மிகவும் தகுதியானவர். அவர் திருமணம் செய்த பெண்களுடன் உண்மையாக இல்லை. அவர்களை ஏமாற்றி உள்ளார். இந்தி பட உலகில் பல பெண் பித்தர்கள் உள்ளனர்.

பாயல் கோஷ் சொன்ன பாலியல் தொல்லை சம்பவம் எனக்கும் பெரிய கதாநாயகர்களால் ஏற்பட்டு உள்ளது. வேன் அல்லது அறைக்குள் கதவை பூட்டியோ அல்லது நடன நிகழ்ச்சியிலோ மோசமான சம்பவங்கள் நடக்கும். ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவார்கள். இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர். தினமும் ஒரு இளம் பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.