தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.

Gossips

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, சமீபத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதால், நடிகையின் வீட்டில் மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தினார்களாம்.
நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை தான் ஒப்பந்தமான படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்த நிலையில், நடிகையின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நாயகி காதலில் விழுந்திருப்பதாக கூறினாராம். அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு ஏதோ சொல்லி குழப்பியிருக்கிறாராம். எனினும் நாயகி காதலில் விழுந்திருப்பது உறுதியாகியிருப்பதால், அவரது காதலர் யார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.