full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

கதை தவிர்த்து கரன்சிக்கு திரும்பும் நடிகர்

தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரவுடி நடிகர், அவரது கொள்கையை தற்போது மாற்றிவிட்டாராம். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தழுவ, தற்போது கதைகளுக்கு பதிலாக சம்பளத்தை வைத்து தான் படத்தை தேர்வு செய்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களையும், இனி நடிக்கப் போகும் படங்களையும் சம்பளத்தை வைத்து தான் முடிவு செய்கிறாராம்.

சம்பளம் பிரச்சனையால் தான், சமீபத்தில் தேசிய விருது இயக்குநரின் படத்தில் இருந்தும் நடிகர் விலகினாராம். தேசிய விருது இயக்குநரின் சென்னை படத்தில் விஐபி நடிகருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகிய ரவுடி நடிகர் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகியிருந்தார்.

நடிகரின் விலகலுக்கு கால்ஷீட் பிரச்சனை தான் காரணமாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் விலகியதற்கு கால்ஷீட் பிரச்சனை காரணமில்லையாம். சம்பள பிரச்சனையால் தான் நடிகர் விலகியதாக சென்னை படக்குழுவினரிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனது கொள்கைக்கு மீண்டும் திரும்பினால் அவருக்கு நல்லது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.