சேராதோர் சேர்க என்று கமல் அழைப்பு

அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார். கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட […]

Continue Reading

ரைசா தெரிவித்த திருமணத்தகவல்

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து சத்யராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக […]

Continue Reading

அமலாபாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

பிரபல நடிகை அமலாபால் ஒன்றரை கோடிக்கு வாங்கிய காரை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்திருந்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அந்நிலையில் அமலாபாலின் கார் சட்டப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் வரி ஏய்ப்பு […]

Continue Reading

தேசிய கீதம் குறித்து அர்விந்த் சாமி தடாலடி கேள்வி

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நடிகர் அரவிந்த்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நான் எங்கே, எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் எழுந்து நின்று மரியாதை செய்கிறேன். அதே நேரத்தில் கூட சேர்ந்து தேசிய கீதத்தைப் பாடவும் செய்கிறேன். அதை பெருமைக்குறிய ஒன்றாகவே கருதுகிறேன். திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்வதன் அவசியம் என்ன என்று […]

Continue Reading

டுவிட்டரில் மெர்சல், உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது. தெறி படத்திற்கு அடுத்து, விஜய், அட்லி வெற்றிக்கூட்டணியில் மற்றுமொரு படம் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. […]

Continue Reading

டுவிட்டரில் இருந்து விலகியது குறித்து குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட தனது கருத்துகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்து வந்தார். 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார். இதுபற்றி குஷ்பு கூறும்போது, ‘நான் டுவிட்டருக்கு அடிமையானது போல் சமீபகாலமாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. காலையில் எழுந்ததுமே கை செல்போனை தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன […]

Continue Reading