பாகுபலி 2 படக்குழுவினருக்கு பிரபல நடிகர் பாராட்டு

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள ‘பாகுபலி–2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு, திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி-2′ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், “’பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

சமூக வலைத்தளங்களில் வைரலான ஜாம்பவான்களின் உரையாடல்!

ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கத்தில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில், இந்த டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், ‘அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை […]

Continue Reading

ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ரத்து

ஏப்ரல் 12 முதல் 17-ஆம் தேதிகளில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது, தனித்தனியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. எனவே எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் பயணம் செய்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் […]

Continue Reading

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, […]

Continue Reading

என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : ரஜினி அதிரடி

ரஜினி தற்போது ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் அறக்கட்டளை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகளை வழங்கு விழாவிற்கு ரஜினி செல்வதாக இருந்தது. ரஜினியின் இலங்கை பயணத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ரஜினி இலங்கை செல்ல மாட்டேன் என்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது…

Continue Reading

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணி, சீமான் என பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாஜக அணி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை சந்தித்து, ஆசி பெற்றார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் தன்னை […]

Continue Reading

செய்தியாளர்கள் மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த இயக்குனர் சங்கர்

சென்னையில் நடந்த 2.O படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், சங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன். இருப்பினும், இந்த மாதிரியான ஒரு […]

Continue Reading

ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் சமீபகால படங்களான ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’ சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர். அந்த […]

Continue Reading

ஆச்சரியப்பட வைக்கும் 2.0 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகளையும் முடித்து விட்டால் ‘2.0’வின் படப்பிடிப்பு  முடிந்துவிடும் என்ற நிலையில், ஆயுத பூஜை அன்று இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தீபாவளி திருநாளில் ‘2.0’ திரைப்படம் திரைக்கு உள்ளது. சில மாதங்களுக்கு […]

Continue Reading

ரஜினி வீட்டில் குற்றம் 23

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குற்றம் 23’. அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இன்று ‘குற்றம் 23’ படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது […]

Continue Reading