சிஷ்யனை வாழ்த்திய பேரன்புக்காரர்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரித்துள்ள முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராமின் உதவியாளராகப் பணியாற்றிவர்.  தனது சிஷ்யப் பிள்ளையினுடைய முதல் திரைப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது, “2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் […]

Continue Reading

“காலா” படத்திற்கு புதிய சிக்கல்!

காலா படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காலா படத்து எதிராக ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய மனுவில், ‘1996-ம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரை நான் தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவு செய்துவைத்துள்ளேன். அதனைத் தொடர்ந்து புதுப்பித்துவந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தத் தலைப்பை புதுப்பிக்கவில்லை. தற்போது, கரிகாலன் என்ற பெயர் காலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெயரில் படம் தயாரிப்பதை […]

Continue Reading

நீலம் பண்பாட்டு மையத்தின் அடுத்த படைப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் பண்பாட்டு மையம் இணைந்து சமூகம் சார்ந்து பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் நடத்திய “The Casteless Collective” இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமில்லாமல், இசை உலகில் பெருத்த சலசலப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் அடுத்ததாக “LADIES AND GENTLEWOMEN” என்னும் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த ஆவணப் படத்தை மாலினி ஜீவரத்னம் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஜஸ்டின் […]

Continue Reading

பா.ரஞ்சித்துடன் இளம் அரசியல் தலைவர் சந்திப்பு!

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ஜிக்னேஷ் மேவானி. தலித் அரசியலை முன்னெடுக்கும் இவர், குஜராத்தில் நடந்த “உணா” புரட்சியின் மூலம் வெளி உலகிற்கு இளம் புரட்சியாளராக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அவர், இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார். முன்னதாக ஜிக்னேஷ் மேவானி, பா.ரஞ்சித் வீட்டிற்கு வரும் வழியில் அவருக்கு விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

Continue Reading

சென்னையில் “உலக இசைகளின் சங்கமம்” – தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும்                                                  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் […]

Continue Reading

பா.இரஞ்சித் வழங்கும் கானா இசை நிகழ்ச்சி

முதன் முறையாக கானா இசையுடன் ராப் மற்றும் ராக் இசையும் இணைந்து புதுவித இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சென்னையின் கானா இசைக்கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள். இதுவரை கானா மட்டும் பாடிக்கொண்டிருந்த நம் இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய ஆப்பிரிக்க இசைகளான ராப், ராக் இசையோடு இணைத்து ஒரு புதிய இசை அனுபவத்தை சென்னை மக்களுக்கு தரவிருக்கிறார்கள். இசைக்கலைமூலமாக புரட்சியும், விடுதலையும் பெற முடியும் என்பதற்கு ஆப்பிரிக்க இசைக்கலைஞர்களை உதாரணத்திற்கு சொல்வார்கள். பல புரட்சிகளுக்கு பாடல்களும், இசையும் பெரும் […]

Continue Reading

இறுதிகட்டத்தில் “காலா”!

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பரபரப்பான விவாதங்களுக்கிடையே, “காலா” படத்தின் அடுத்தகட்ட வேலையை இயக்குநர் பா.ரஞ்சித் ஆரம்பித்துள்ளார். கபாலி படத்திற்குப் பிறகு இரண்டாம் முறையாக இணைந்துள்ள திரைப்படம் “காலா”. “வுண்டர்பார் ஃப்லிம்ஸ்” சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டிருக்கிறது. ஏற்கனவே படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்ரும் இரண்டாம் லுக் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள “காலா” படத்திற்காக மும்பை தாராவி பகுதியை தத்ரூபமாக […]

Continue Reading

பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!

தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். ரஜினியை முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் கபாலியாக முன்னிறுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பயனாக மீண்டும் ரஜினியை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தற்போது “காலா”வில் ரஜினியை இயக்கி வரும் ரஞ்சித், ரஜினியின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியாவது, “என்மேல் அன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்ட “காலா”அவர்களுக்கு மனமகிழ்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று […]

Continue Reading