ஆதரவு திரட்ட வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

14-வது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வேட்புமனுவை கடந்த 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரது முன்னிலையில் தாக்கல் செய்தார். தனக்கு ஆதரவு அளித்த கட்சி தலைவர்களையும், அந்தந்த கட்சிகளின் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை […]

Continue Reading

ஜனாதிபதி டிரம்பிற்கு மோடி அளித்த பரிசு பொருட்கள்

அமெரிக்காவில் அரசுமுறை பயணமாக சென்றிருந்த மோடி, ஜனாதிபதி டிரம்பிற்கும், அவரது மனைவிக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை, ஜனாதிபதி டிரம்ப்பும் அவரது மனைவியும் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி டிரம்ப்பிற்கு இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பரிசுப் பொருள்களை வழங்கினார். 52 வருடங்களுக்கு முன்னர், 1965ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவருக்கு தபால்தலை […]

Continue Reading

பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்து

pr இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புனிதமான இந்த நாள் சமூகத்தில் அமைதி, சகோதரத்துவத்தை மேலும் பரவச்செய்யட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading

உப்பு எவ்வளவு முக்கியமோ, வாழ்க்கைக்கு யோகாவும் : பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி, 7.50 வரை, 51 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில கவர்னர் ராம்நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். யோகா தின நிகழ்ச்சியின் போது கனமழை பெய்தது. […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், பாஜக அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும், தங்களுக்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க.வில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய 3 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட அனைவரிடமும் பேச்சு நடத்தினார்கள். மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. […]

Continue Reading

விவசாய கடன் தள்ளுபடி, மத்திய அரசு உதவி செய்யுமா? அருண் ஜெட்லி பதில்

மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட விவகாரம் […]

Continue Reading

நல்லுறவு தேவை என்பதாலேயே, நெருக்கம் காட்டுகிறோம் : வெங்கய்யா நாயுடு

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த பின் நிருபர்களுக்கு வெங்கய்யா நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால் தான், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் […]

Continue Reading

ஓபிஎஸ் அறிவிப்பால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜெயபால், சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பன்னீர்செல்வம் அணி சார்பில் அறிக்கை ஒன்று […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மோடியை நாளை சந்திக்கிறார்

இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 19–ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் […]

Continue Reading

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன், சிமெண்டு, மருந்துகள் விலை குறையும்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மொத்தம் 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இருக்கும். எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு வரி என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் இறுதி செய்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களின் விலை […]

Continue Reading