அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த […]

Continue Reading

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் : எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-து விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து, “2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. […]

Continue Reading

நல்லுறவு தேவை என்பதாலேயே, நெருக்கம் காட்டுகிறோம் : வெங்கய்யா நாயுடு

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த பின் நிருபர்களுக்கு வெங்கய்யா நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால் தான், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மோடியை நாளை சந்திக்கிறார்

இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 19–ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் […]

Continue Reading