பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

உடைந்த திரையுலகம்.. உடைத்த கந்துவட்டியும், ஆர்.கே.நகரும்!

திரையுலகில் பொதுவாகவே போட்டி என்பது நேரடியாகவும், பொறாமை என்பது மறைமுகமாகவும் இருக்கக் கூடியது தான். பெரும்பான்மையான நேரங்களில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் இருந்தாலும், திரையுலகின் நலனைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஓரணியிலேயே நின்றிருக்கிறார்கள். உள்ளுக்குள்ளேயே அரசியல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெரிய நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை எதையும் வெளிப்படையாக பேசாமலே கடந்து போவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. சரத்குமாரை வீழ்த்தி நடிகர் சங்கத்தை என்று விஷால் கைப்பற்றினாரோ […]

Continue Reading

சுயேட்சை வேட்பாளராக விஷால்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading

வசூல் மன்னனான வில்லன்

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’. அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. […]

Continue Reading

வில்லனை வாழ்த்திய மிஷ்கின்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சு வாரியார் அகியோருடன் முதல் முறையாக இணைந்து விஷால் நடிதிருக்கும் படம் “வில்லன்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ராக்லைன் வென்கடேஷ் தயாரித்துள்ள வில்லன் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் புகந்து தள்ளியுள்ளார். “மிகச் சிறந்த நடிகராகிய மோகன் லால், இந்தப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியாரும் விஷாலும் தங்களது […]

Continue Reading

படப்பிடிப்பு இடைவேளையில் புத்தக வெளியீடு

2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்று வந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது, இயக்குநரும், வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் கவிதை நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற பிருந்தா சாரதியின் ஹைகூ […]

Continue Reading

கட்டம் கட்டப்பட்ட விஷால்.. பறக்கும் ரெய்டுகள்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி குறித்து கலால் வரித்துறையினர்  திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். விஷாலுடைய நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வடபழனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடைபெற்று வருகிறது.  எந்த ஒரு நிறுவனத்திலும்  ஜிஎஸ்டி கலால் வரித்துறையினர் ஆய்வு செய்வது இதுவே […]

Continue Reading