சிங்கீதம் திரை விமர்சனம்
நடிகர்கள் : அஹல்யா பம்ரு, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், மற்றும் பலர்.
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்,
ஒளிப்பதிவு : அங்கூர். சி,
இயக்கம்: சங்கீதம் சீனிவாச ராவ்,
தயாரிப்பு : நாக் அஸ்வித்.

குபேரபுரம் என்ற கிராமத்தை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதை, இயற்கையை அழிக்கும் மனித பேராசையின் விளைவுகளை மிக அழகான கற்பனை வடிவத்தில் பேசுகிறது. கிராமத்தின் கடைசி புனித மரம் வெட்டப்பட்ட பிறகு, அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சாபம் காரணமாக அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பாடலாக மாறுகிறது. இந்த வித்தியாசமான கதை கருவே படத்தின் மிகப்பெரிய பலம்.
படத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், சுமார் 75 சதவீத வசனங்கள் பாடல்களாகவும், மீதமுள்ள 25 சதவீதம் மட்டுமே சாதாரண வசனங்களாகவும் அமைந்திருப்பது. இந்திய சினிமாவில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. ஆனால் அதை வெறும் பரிசோதனையாக இல்லாமல், முழுமையான திரை அனுபவமாக மாற்றியிருப்பது சிங்கீதம் சீனிவாச ராவின் திறமையை மீண்டும் நிரூபிக்கிறது.
முதல் சில நிமிடங்களில் ஒரு சாதாரண கிராமிய கதையாக தொடங்கும் படம், சாபம் வந்த பிறகு முற்றிலும் புதிய பரிமாணத்திற்குள் நுழைகிறது. ஆரம்பத்தில் வித்தியாசமாக தோன்றும் பாடல் வடிவ உரையாடல்கள், கதையோடு ஒன்றிப்போகும் போது பார்வையாளர்களையும் அந்த உலகத்தின் ஒரு பகுதியாக மாற்றுகின்றன.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மீண்டும் ஒருமுறை தன்னை இந்திய சினிமாவின் தலைசிறந்த கதைசொல்லிகளில் ஒருவராக நிரூபித்திருக்கிறார். புஷ்பக விமானம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், ஆதித்யா 369 போன்ற படங்களில் வெளிப்பட்ட அதே குழந்தைத்தனமான கற்பனையும், மனிதநேயமும் இந்தப் படத்திலும் நிரம்பியுள்ளது. குறிப்பாக 94 வயதிலும் இவ்வளவு புதுமையான சிந்தனையுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல; அது சினிமா மீதான அவரின் முடிவில்லாத காதலின் சான்றாகும்.
படத்தின் இசை குறித்து தனியே பேச வேண்டும். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த படத்தின் ஆன்மாவாக செயல்பட்டுள்ளார். பாடல்களே கதையாக மாறும் இந்த முயற்சிக்கு அவர் வழங்கிய இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக உணர்ச்சிகரமான தருணங்களில் அவரது பின்னணி இசை கதையின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
புதுமுக நடிகர்கள் அயான், அஹில்யா உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். இயல்பான நடிப்பும், பாடல் வடிவ உரையாடல்களையும் திறம்பட கையாண்ட விதமும் பாராட்டத்தக்கது. துளசி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் செட் அமைப்புகள் செயற்கையாக தோன்றினாலும், அவை படத்தின் உணர்வுபூர்வமான பயணத்தை பாதிக்கவில்லை. ஏனெனில் இந்தப் படம் தொழில்நுட்ப பிரம்மாண்டத்தை விட கதையையும் உணர்வுகளையும் நம்புகிறது.
மொத்தத்தில், “சிங் கீதம்” என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; ஒரு தாத்தா தனது பேரக்குழந்தைகளுக்கு சொல்லும் மாயாஜாலக் கதையைப் போல மனதை வருடும் அனுபவம். 94 வயதிலும் புதுமையைத் தேடி, சினிமா மொழிக்கு புதிய பரிமாணம் கொடுத்திருக்கும்

