full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கில்லை!

நடிகைகள் வாய்ப்புகளுக்காக பாலியல் ரீதியில் உள்ளாகும் இன்னல்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவ்வாறாக பதில் அளித்திருக்கிறார்,

“சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது.

உனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை அப்படி எதுவும் நடந்தது இல்லை. சினிமா வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அழகி போட்டியில் பங்கேற்றேன். ஆனால் வெற்றிபெறவில்லை. அந்த போட்டி நடந்து 7 ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் அப்போது நடந்த அழகி போட்டி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. நடிகையாகி விட்டேன். இப்போது அழகி போட்டிக்கு என்னை நடுவராக அழைக்கிறார்கள். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையில் ஒரு பகுதிதான். இந்த அனுபவங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கும்” என்றார்.