full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

கண் அடிச்சதுக்குக் கூடவா வழக்கு?

 

கடந்த வாரம் வரை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்றால் ஒருவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ். டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அம்மணி தான். அப்படி என்ன தான் செய்துவிட்டார் இவர்?

ஒன்றுமில்லை, ஒரே ஒரு கண்ணசைவு தான்.

“ஒரு அடார் லவ்” என்கிற மலையாள படத்தின் “மாணிக்ய மலராய பூவி” என்ற சிங்கிள் சாங் வெளியானதிலிருந்து எங்கேயும் பிரியா, எதிலேயும் பிரியா. அதுவும் அவர் கண்ணடித்து சிரிக்கிற
அந்த கிளிப்பிங் மட்டும் தான் இப்போது வைரலாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. மீம்களாக பறந்து கொண்டிருக்கிறது.

அந்த “கண்ணசைவு” தான் இப்போது ஏழறையாகவும் மாறியிருக்கிறது. பிரியா மீதும்,  “ஒரு அடார் லவ்” படக்குழுவின் மீதும் இசுலாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக கேரளாவில் வழக்கு தொடுத்திருத்திருக்கிறார்கள். எழுத்து மூலமாக வழக்கைப் பெற்றுக்கொண்ட காவல்துறையும் விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறதாம்.

கண் அடிச்சது ஒரு குத்தமாய்யா??