full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

தமிழ் பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது!

அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்திற்காக போராடி வரக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவராகத் தான் இன்று வரை போராடி வருகிறார்.

வருகிற 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் “பலூன்” படம் திரை வாழ்க்கையில் திருப்பு முனையைக் கொடுக்கும் என ஜனனி ஐயர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது,

“பலூன்” படத்தில் 1980களில் நடிக்கும் கதை பகுதியில் நான் நடித்திருக்கிறேன். இதில் அந்த காலத்து பெண் போல ஆடை அணிந்து நடிக்கிறேன். நடை, உடை, பாவனைகளிலும்
அதை பிரதிபலித்திருக்கிறேன். நான் தமிழ் பெண் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்துக்கு பிறகு தமிழில் நான் முக்கியமான இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதற்காகவே இதில் எனது பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறேன். இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள பலூன் திரைப்படத்தை “70எம் எம்” மற்றும் “பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்” நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. முக்கியமாக இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியும் நடித்தியுள்ளார்.