full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பயங்கர தீ

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதிகளில் பயங்கர தீவிபத்து நடந்தது.   செங்கல்பட்டு டோல்கேட் அருகே வனப்பகுதிகள் சூழ்ந்திருக்கும். இங்கு இன்று காட்டுத் தீ ஏற்பட்டது.

செங்கல்பட்டு டோல்கேட் அருகே வனப்பகுதிகள் சூழ்ந்திருக்கும். இங்கு இன்று காட்டுத் தீ ஏற்பட்டது.

காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டமாக காணப்பட்டது.

முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தேனி மாவட்டம் குரங்கணி மலை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தால் 18 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.