சாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது, ”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக […]

Continue Reading

பிரியாவின் அடுத்த படம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு ப்ரமோஷன் ஆகி பிரியா நடித்த முதல் படமாகிய “ மேயாத மான்” கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரியா பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் “பருத்திவீரன்” கார்த்தி நாயகனாக நடிக்கிறார் என்பது […]

Continue Reading

காசிக்கு போன கலகலப்பு

சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும்`கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் […]

Continue Reading

சினிமா தற்போது விவசாயமாகி விட்டது : சேரன்

கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய சேரன், “பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர். படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Continue Reading

”மனிதமே எங்கள் மதம்” – விஜய் தந்தை பேச்சு!

மெர்சல் திரைப்படத்தின் விவகாரத்தில் நடிகர் விஜயை நோக்கி மத ரீதியில் திசை திருப்பப்படும் வேளையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது.. “நான் ஒரு கிறிஸ்தவன்.. என் மனைவி ஒரு இந்து. எங்களுக்குப் பிறந்த விஜய் எந்த மதமாக இருக்க முடியும்?? நான்கு வயதில் விஜயை பள்ளியில் சேர்க்கும் போதே மதம், சாதி என அனைத்துப் பகுதிகளிலும் “இந்தியன்” என்றே குறிப்பிட்டு சேர்த்தோம். விஜய், ஒரு மனிதனுக்கும் ஒரு மனுஷிக்கும் பிறந்த […]

Continue Reading

தங்கர் பச்சானின் காட்டமான டுவிட்டர் பதிவு

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார். அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் […]

Continue Reading

”பிரேமம்” இயக்குனரின் அடுத்த தமிழ்ப்படம்!

தமிழில் “நேரம்”, மலையாளத்தில் “பிரேமம்” ஆகிய படங்களை இயக்கியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி எதிர்பார்ப்பிற்குறிய இயக்குனராக மாறிய இவர், தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நடிகர் ஜயராமின் மகன் காளிதாஸை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும், அதே படத்தில் தனது நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமாகிய சித்தார்த்தும் முக்கியமான கதபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் அல்ஃபோன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெறிவிக்கையில், ”இந்த படத்தை முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட […]

Continue Reading

எந்திரன் இசை விழாவில் ஏ ஆரின் கச்சேரி

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவின் போது ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் […]

Continue Reading

ரஜினியை விமர்சித்த சீமான்!

மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர்,  கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தற்போது […]

Continue Reading

நரகாசூரன் படத்தின் புதிய தகவல்

`துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி வரும் படம் `நரகாசூரன்’. கடந்த மாதம் ஊட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் […]

Continue Reading