ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்‌ஷன் கிங்” டீசர்!

வேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]

Continue Reading

ஏ.ஆர்.ரகுமானா? அனிருத்தா?

1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை […]

Continue Reading

மெர்சல் படத்தில் இருப்பது போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும் – சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன், தற்போது இயக்கியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பற்றி பேசிய போது, “’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும், மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். […]

Continue Reading

பவளவிழா காணும் தினத்தந்தி!

1942 ஆம் ஆண்டு மதுரையில் சி.பா.ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்ட “தந்தி” தொடங்கப்பட்ட நாளிதழ் பின்னாளில் “தினத்தந்தி” என்று மாறியது. தமிழ் செய்தித்தாள் வரலாற்றில் மாபெரும் புரட்சியை தினத்த்ந்தி செய்துள்ளது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று. வெறும் வானொலியை நம்பியிருந்த காலகட்டத்தில் செய்திகளை கடகோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பதில் முதல்வனாக விளங்கிய தினத்தந்தி, வரலாற்றில் பல மைல்கற்களைக் கடந்து இன்று செய்தி ஊடகங்களின் மன்னனாகத் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில்  நடைபெற்ற இந்த பவள விழாவில் இந்தியப் […]

Continue Reading

ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading

தனிக்கட்சி தொடங்கும் கமல்!

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது: ”இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் […]

Continue Reading

விவசாயிகள் கூட்டத்தில் கமல் ஆவேசம்!

நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ட்விட்டரில் களமாடிய நடிகர் கமல், கடந்த வாரத்திற்கு முன்பு முதல் முறையாக எண்ணூர் கழிமுகத்தை ஆய்வு செய்து களத்திற்கு வந்தார். சில நாட்களுக்கு முன்பு “இந்துத் தீவிரவாதம்” குறித்த்து அவர் தெரிவித்த கருத்திற்கு, இந்துத்வ அமைப்புகள் கமலைக் கொல்ல வெண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்கள். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, “ தமிழகத்தில் ஒரு கிராமத்தில் […]

Continue Reading

ஆபத்துக்கு பாவம் இல்லை : கமல்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு சென்று அங்கு கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பகுதியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அனல் மின் நிலைய சாம்பல் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வட சென்னைக்கு மழையால் வெள்ளம் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும், வெள்ளப்பகுதிகளுக்கு சென்று பல்வேறு உதவிகளை […]

Continue Reading

கள்வர்களின் காலமாக மாறிவிட்டது : தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் விழித்திரு படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் மீரா கதிரவனின் இரண்டாவது படமான  “விழித்திரு” திரைப்படம் பல இன்னல்களைக் கடந்து வெளியாகியுள்ளது. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் கற்காமல் இலக்கியம், அரசியல் புரிதலுடன் படைப்புகளை உருவாக்கும் பயிற்சி பெற்றவர் இவர். சிறந்த படைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பல்வேறு அவமானங்களை சகித்துக் கொண்டு கள்வர்களின் காலமாக மாறிவிட்ட இந்த […]

Continue Reading