குழந்தைகளை குறிவைக்கும் “கொரில்லா”!!

“ஆல் இன் பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதியதிரைப்படம் கொரில்லா. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி. படத்தைப் […]

Continue Reading

என்னை முற்றிலும் மாற்றியது அவர்தான் – இலியானா

ஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர் தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் செய்திகள் வந்தன. இதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது, “எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோ‌ஷப்படுவேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் […]

Continue Reading

மோகன்லால் முடிவை எதிர்க்கும் நடிகைகள்.. குவியும் பாராட்டு!!

  மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு தந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் திலீப். இதன் காரணமாக அவர் கேரள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் மோகன்லால் சங்கத் தலைவராக வந்த உடன், திலீப்பை மீண்டும் உருப்பினராக சேர்த்துக்கொண்டார்கள். மோகன்லாலின் இந்த முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகைகள் பாவனா, கீது மோகந்தாஸ், […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் இயக்கும் மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்

காலா படத்தில் புயல் சாருமதியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி பாட்டீல். அவரிடம் தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு சர்வதேச ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறேன். அடுத்த மாதம் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்’னு ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு டிசைனரும்கூட. கவிதைகள் எழுதுவேன். தமிழில் நிறைய படங்களில் நடிக்கும் ஐடியா இருக்கு. புயல் மாதிரி புரட்சி கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் வேறுவகை கதாபாத்திரங்களுக்கும் காத்திருக்கிறேன். ஏஞ்சலினா […]

Continue Reading

குழந்தைகளைக் கவர வரும், ரத்தம் குடிக்காத காட்டேரி!!

“ஸ்டூடியோ கிரீன்” பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் “காட்டேரி”. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே. படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கூறும்போது, […]

Continue Reading

தாத்தாவின் வாழ்க்கையைப் படமாக்கும் இயக்குநர்

நடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்’ என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், காமெடி, நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கிய எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த படமாக எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். […]

Continue Reading

மீண்டும் பார்த்திபனுடன் வடிவேலு

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. விமல் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைகைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக […]

Continue Reading

அரசுக்கு கோரிக்கை வைத்த விஷால்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் […]

Continue Reading

ரெட் கார்டு வாங்காமல் தப்புவாரா வடிவேல்?

வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது. சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் […]

Continue Reading

நடிகர் ரிஷியுடன் காதலா? மஞ்சிமா விளக்கம்

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கெளதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரிஷியை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க […]

Continue Reading