full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

‘பாகுபலி-2’ – சென்சார் ரிசல்ட் வந்துருச்சு!!

2015-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கும் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் உள்ள இப்படம், உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருப்பதால், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.