full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

தகவல் தவறானது என இயக்குநர் தகவல்

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, படத்தில் நடிப்பதற்காக ப்ரியா வாரியரை நாங்கள் அணுகவில்லை. மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம். எந்த நடிகையுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் மட்டுமே துவங்கி நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும், என்.ஜி.கே., படத்தை சூர்யா முடித்த பிறகே மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.