full screen background image
Search
Tuesday 21 May 2024
  • :
  • :
Latest Update

வேதா இல்லம் நினைவிடமாகும் : எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் வட்டாரத்திலும் பல்வேறு தரப்பிலும் சந்தேகங்கள் வலுத்தது. இதனால் மரணம் குறித்த நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் கூறினார்.