விஜய் சேதுபதி மணிரத்தினத்திடம் சொன்ன கதை

News

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மணிரத்னம் செக்க சிவந்த வானம் என்ற புது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி அருண்விஜய் மற்றும் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் இன்று செக்க சிவந்த வானம் படப்பிடிப்பும் தொடங்கியது. மணிரத்னம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காட்சிகளை படமாக்க இருக்கிறார். அதற்காக இன்று காலையே விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது பழைய நினைவுகளை மணிரத்தினத்திடம் பகிர்ந்துள்ளார்.

 

விஜய் சேதுபதி

குறிப்பாக முதல்நாள் படப்பிடிப்பின்போது அவரை சந்திக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பழைய சம்பவத்தை மணிரத்னத்திடம் நினைவு கூர்ந்திருக்கிறார் அதைக்கேட்ட மணிரத்னம் சின்ன புன்முறுவலுடன் நகர்ந்து சென்றாராம் என படப்பிடிப்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.