விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு

மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ். நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி. பிரேம்குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் […]

Continue Reading

விக்ரமின் `சாமி-2′ படத்தில் இரண்டு கதாநாயகிகள்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி’ படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2′ விலும் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அதன் இரண்டாவது […]

Continue Reading

முழுவீச்சில் மூன்று படங்கள் முடித்த த்ரிஷா

சினிமாத்துறையில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபகாலமாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றி கொடுக்க […]

Continue Reading

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’

த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கர்ஜனை’. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுகரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, ‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஐந்து […]

Continue Reading