ரஜினி வீட்டின் முன் தள்ளுமுள்ளு!

தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார். ரஜினி படம் வெளியாகிறது என்றால் தான் அவரது ரசிகர்களுக்கு திருவிழா. தற்போது ரஜினி 2.0 மற்றும் காலா என இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வருவதற்குத் தயாராகி வருவதாக கூறப்படும் இந்த சூழலில், அவரது பிறந்தநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே தான் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். பல ஊர்களில் இருந்தும் அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் […]

Continue Reading

எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் […]

Continue Reading

பா.ரஞ்சித் தொடங்கி வைத்த “பற”!

‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.  இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் […]

Continue Reading

நாங்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் : கோபி நயினார்

இயக்குநர் பா ரஞ்சித் அறம் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரது வாழ்த்து பதிவில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் பெயர் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் கோபி நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். […]

Continue Reading

தமிழக மாணவர்களுக்காகக் களமிறங்கிய பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர், […]

Continue Reading

ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் ஆண்டனி

ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆண்டனி’. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களைக் கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார். சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த […]

Continue Reading

கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த தலைப்பு : பா ரஞ்சித்

இயக்குனர் பா இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்படக்கண்காட்சி ஒன்றை நேற்று துவக்கி வைத்தார் பா.இரஞ்சித். “சாதியை ஒழிப்போம்.. சமூக மாற்றத்திற்கான மனித மாண்பை மீட்டெடுப்போம்” என்கிற முழக்கத்தோடு […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading

பா.இரஞ்சித்தின் அடுத்த முயற்சி!

இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் காக்கும் விஷால்.. காரணம் என்ன?

  மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை  நீக்க வேண்டிய அவசியமில்லை […]

Continue Reading