நிவின் பாலியுடன் கைகோர்க்கும் மக்கள் செல்வன்!

19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்தவர் கொச்சுண்ணி. இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். 1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. கோகுலம் கோபாலன் வழங்கும் “ஸ்ரீகோகுலம் மூவிஸ்” தயாரிக்கும் திரைப்படம் “காயம்குளம் கொச்சுண்ணி”. இதை “36 வயதினிலே”, “மும்பை போலீஸ்” புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் […]

Continue Reading

டாக்டர் அனிதாவிற்காக நடிகர் செய்த மகத்தான காரியம்!

தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட இளம் நடிகர்களில் எதையுமே தனித்துவமாக செய்யக் கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகட்டும், பொது விசயங்களுக்கு கருத்து தெரிவிப்பதாகட்டும் எதிலுமே துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட விஜய் சேதுபதி தற்போது, நீட் தேர்வினால் மரணமடைந்த மாணவி அனிதாவின் நினைவாக செய்திருக்கும் காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது சம்பந்தமாக விஜய் சேதுபதி வெளியுட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தேன். […]

Continue Reading