நாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி […]

Continue Reading

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

தினகரன் மீது 2 போலீஸ் நிலையங்களில் புகார்

கடந்த 9-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், “சபாநாயகரும் இந்த நாட்டின் குடிமகன் தான். பேரவைக்குள் வேண்டுமானால் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். எம் எல் ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்மாதிரி தீர்ப்பு இருக்கிறது. 18 எம் எல் ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தால், சபாநாயகர் தனபாலை, யார் விட்டாலும், நான் விடப்போவதில்லை.” என்று பேசியிருந்தார். சபாநாயகர் தனபாலை மிரட்டுவது […]

Continue Reading

5 நாட்கள் பரோலில் சசிகலா சென்னை வருகை

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் சென்று பார்க்க 15 நாட்கள் அவசர “பரோல்” வழங்குமாறும் கோரி இருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் […]

Continue Reading

பரோல் கேட்ட சசிகலா மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சார்பில், சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் நேற்று ஒரு மனு வழங்கப்பட்டது. அதில், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் […]

Continue Reading

புதிய சேனல் ஆரம்பிக்கும் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி., டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கட்சி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியைத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள். ஆனால் டி.டி.வி.தினகரன் தொடர்பான செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அரசுத் திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தவிர்த்து விடுகின்றனர். இதனால் எடப்பாடி அணியினர் தங்களை பற்றிய தகவல்களை தொண்டர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே புதிதாக நாளிதழ் மற்றும் […]

Continue Reading

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் மோடி

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார், “மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நிறைவாக, சென்னையில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குகள் இருப்பதாக தினகரன் கூறிவரும் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சி, சிறப்பாக மக்கள் […]

Continue Reading

தினகரன் ஆதரவு எம் எல் ஏ க்கள் தகுதிநீக்கம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அவர் 19 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தார். முதல்வரை மாற்றுவது என்பது உள்கட்சி விவகாரம், எனவே நான் தலையிட முடியாது என்று கவர்னர் அவர்களிடம் தெரிவித்து விட்டார். என்றாலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

Continue Reading

சசிகலா நியமனம் ரத்து : அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) என்றும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்றும் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. இதற்கு டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் […]

Continue Reading

அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில்

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சசிகலா ஒப்புதலோடு தினகரன் நீக்கி வருவதோடு, தனது ஆதரவாளர்களை அந்தப் பதவிக்கு நியமித்தும் வருகிறார். பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவியைப் பறித்த தினகரன், அந்தப் பதவிக்கு நடிகர் செந்திலை நியமித்தார். இன்று சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை நடிகர் செந்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் அனைத்துப் பிரச்னைகளையும் அவரே பார்த்துக்கொள்வார். முதலமைச்சர் […]

Continue Reading