கடமையாற்ற களத்திற்கு அழைக்கும் ஜி வி பிரகாஷ்

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷூம் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷ், கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம் என்று கன்னியாகுமரி மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது […]

Continue Reading

அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், […]

Continue Reading

நடிகர் ஆரி கலந்து கொண்ட ‘தோழமை 108’

நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல நிலைகளில் உதவிகள் புரிய போதிய மனித வளம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் நம் சமூகத்தைக் காக்க 108 அவசரச் சேவை ஒரு புதிய திட்டத்தை இன்று அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் முயற்சியாக, அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ‘நமது தோள்கள்’ அறக்கட்டளையும், 108 ஆம்புலஸ் அவசர சேவையும் இணைந்து முதல் கட்டமாக சென்னையில் […]

Continue Reading

மத்திய அரசின் திட்டம் போல பிக்பாஸ்

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “உறுதி கொள்”. கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை […]

Continue Reading

‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியிட 50 லட்சம் இழப்பீடு

நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “என்னுடைய தந்தை நாகேஷ், 1958-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். அவர் சென்னை தியாகராய […]

Continue Reading