தமிழகத்தின் 29வது ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்பு

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் […]

Continue Reading

தமிழகம் வந்த புதிய ஆளுநருக்கு வரவேற்பு

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்ததையடுத்து, மகாராஷ்டிர மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது, தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் சென்னை வந்த புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு சென்னை விமான நிலையத்தில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]

Continue Reading

விடைபெற்றார் வித்யாசாகர் ராவ்

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய […]

Continue Reading

அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த […]

Continue Reading

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் : எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-து விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து, “2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மோடியை நாளை சந்திக்கிறார்

இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 19–ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் […]

Continue Reading

ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த சிலர் ஈபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளனர் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை அண்ணாசதுக்கத்தில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஓ.பி.எஸ். அணியில் இருந்து எங்கள் அணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓ.பி.எஸ். அணிக்கு செல்லத் தயாராக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக செம்மலை இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியான முறையில் உள்ளது. சசிகலாதான் கட்சியை நடத்துகிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அதில் […]

Continue Reading