மர்மர் – திரைவிமர்சனம்

cinema news movie review

மர்மர் – திரைவிமர்சனம்

மர்மர் அறிமுக இயக்குனர் ஹேம்நாத் நாராயணனின் புதிய முயற்சி மர்மர் முழுக்க முழுக்க ஒரு த்ரில்லர் படமாக இயக்கி உள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு களம் என்று கூட சொல்லலாம் புதிய முயற்சி எப்படி இருக்கு என்று பார்ப்போம்

இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம்
சுகன்யா ஷண்முகம்
யுவிகா ராஜேந்திரன்
அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர் ஹேம்நாத் நாராயணன் படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் படத்தின் ஒளிப்பதிவாளர்ஜேசன் வில்லியம்ஸ் முற்றிலும் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் இந்த படம் மர்மம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா

ஜவ்வாது மலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கன்னிமார்கள் வந்து குளிப்பார்கள் என்று அந்த கிராமத்து மக்களின் ஐதீகம் அவர்களை இதுவரை யாரும் பார்க்க முடியாது பார்க்கவும் முடியவில்லை ஒரு சில காரணங்களால் ஒரு பெண்ணால் அந்த கிராம மக்கள் சாபத்துக்கு பழிக்கப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள யாரும் அசைவம் போதைப் பொருட்கள் இதை உபயோகித்தால் அந்த சபிக்கப்பட்ட பெண்ணால் பழிவாங்கப்படுவார்கள். அந்தக் காட்டுக்குள் சபிக்கப்பட்ட பெண்ணான மங்கை யார் என்று படம் பிடிக்க ஒரு நான்கு பேர் அந்த காட்டுக்குள் செல்கிறார்கள். காட்டுக்குள் சென்றவர்கள் நிலைமை என்ன ஆயிற்று என்பதை மீதி கதை

படத்தில் நடித்த அனைவரும் புது முகங்கள் இருந்தும் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமான நடிப்பின் மூலம் படத்திற்கு வருகை சேர்த்திருக்கிறார்கள்
இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் புதிய முயற்சி புதிய திரைக்கதை புதிய களம் விறுவிறுப்பாகவும் அனைவரும் பயமுறுத்தும் அளவில் அற்புதமாக கொடுத்திருக்கிறார்கள் குறிப்பாக ஒரு பேய் ஒரு திரில்லர் படம் என்றால் பின்னணிசையில் பயமுறுத்துவார்கள் ஆனால் இந்த படத்தில் இயக்குனர் ஹேமநாத் நாராயணன் பின்னணி இசை இல்லாமல் நம்மை பயமுறுத்து இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் இதற்காகவே இயக்குனர் ஹேமநாத் நாராயணனை நாம் பாராட்ட வேண்டும்.

காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை மிகவும் திகழுடன் அற்புதமாக காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன்.

மொத்தத்தில் மர்மர் பயம்