மின்மினியாக விஷ்ணு விஷால், அமலாபால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `மாவீரன் கிட்டு’. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு `மின்மினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Continue Reading

மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்?

    சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் […]

Continue Reading

சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படமும்

தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி’ (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் […]

Continue Reading

சம்திங் ஸ்பெஷலுடன் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ டீசர் வெளியீடு!

V.C.R.பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பிளஸ் or மைனஸ்’. இந்தப்படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்சரா, அக்‌ஷிதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ‘ஜெய் சுப்பிரமணி யசோதா’ இயக்கியுள்ளார். ஜெய் கிரிஷ் என்பவர் இசையமைக்க, சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது. படம் நன்றாக வந்திருப்பதில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த உற்சாகத்துடன் இந்தப்படத்தின் டீசரை வரும் […]

Continue Reading

உயரிய விருது பெற்ற கே.விஸ்வநாத்

இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2016 ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். இந்த விருதுடன் 10 […]

Continue Reading

தேசிய விருதை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்: நடிகர் ஆவேசம்

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைத் தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்‌ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்‌ஷய் குமார், “ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரை சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக […]

Continue Reading

மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு […]

Continue Reading

இயக்குநர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘மகளிர் மட்டும்’ […]

Continue Reading

சுஜா வரூணியின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட்!!

‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி. “எனக்கு வாய்ப்பளிப்பதற்காக, என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். […]

Continue Reading

கமல், ரஜினி படத் தலைப்புகளில் சிபிராஜ்

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் நடிப்பில் 90-களில் வெளிவந்த ‘சத்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற பெயரை வைத்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். சிபிராஜுக்கு ஜோடியாக ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார். ராம்ஜீவன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]

Continue Reading